Archives: அக்டோபர் 2017

வேறுவகையான அன்பு

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சபை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில் அந்த சபை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் நன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உதவிகள் செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த திருச்சபையில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுக்கின்றனர். அந்தத் திருச்சபை பரலோகத்திற்கு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட பாவிகளாக, இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட்டவர்களாக, இருப்பதினால் தான் அச்சபையை அதிகமாக நேசிக்கிறேன்.

சில சமயங்களில் திருச்சபை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகள் கூடும் பாதுகாப்பான அடைக்கலம் போல இல்லாத பொழுதுபோக்குக் குழு கூடும் இடம் போல இருந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரம் உடைய மக்கள் ஒரே குழுவாகக் கூடுவது இயற்கையான காரியமாகும். எப்படிப்பட்ட மக்களோடு அவர்கள் இலகுவாக இணைந்து செயல்பட முடியுமோ, அப்படிப்பட்ட மக்கள் மட்டும் இணைந்து கொள்வது இயற்கையானது. இப்படிச் செய்வதால் விடப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்வார்கள். “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 15:12) என்று இயேசு கூறிய பொழுது, அப்படிப்பட்ட பிரிவினையை மனதில் எண்ணவில்லை. அவருடைய திருச்சபையில் உள்ள மக்கள் அனைவரும், தேவனுடைய அன்பை எல்லாரோடும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட மக்கள் மனம் பாதிப்படைந்தால், அன்பான அடைக்கலத்தையும், ஆறுதலையும், மன்னிப்பையும் இயேசுவில் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் அப்படிப்பட்ட மக்கள் திருச்சபையில் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் விசேஷமாக நம்முடைய தரத்திலே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை, நம்மூலமாக நேசிக்க இயேசு விரும்புகிறார். மக்கள் அனைவரையம் அன்பினால் இணைத்து ஆராதனை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியானது! அது பரலோகத்தின் ஒரு பகுதியை பூமியிலே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது போன்றதாகும்.

உங்களது பாதுகாவலான இடம்

நானும், என் மகளும், எங்களுக்கு அருகில் வசிக்கும் எங்களது உறவினர்கள் அனைரும் சேர்ந்து ஒரு குடும்பக் கூடுகைக்குச் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தோம். எனது மகள் அந்த கூடுகையைக் குறித்து சற்று பயந்ததால், “நான் எனது காரை ஓட்டிச்செல்லுகிறேன்”, அதில் போகலாம் என்று கூறினேன். “சரி ஆனால், என்னுடைய காரில் செல்லுவது வசதியாக இருக்கும். அதை உங்களால் ஓட்டிவர இயலுமா?” என்று கேட்டாள். எனது சிறிய காரைவிட அவளது பெரிய காரை பயன்படுத்த அவள் விரும்புகிறாள் என்று நான் எண்ணிக் கொண்டு, “என்னுடைய கார் மிகவும் நெருக்கமாக உள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவள் “அப்படி இல்லை, எனது கார்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் அதில் இருக்கும் பொழுது நான் பாதுகாப்புடன் இருப்பதாக உணருகிறேன்” என்றாள்.

அவள் கூறியது என்னுடைய தனிப்பட்ட “பாதுகாவலான இடத்தைக்” குறித்து சிந்திக்கத் தூண்டியது. “கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்” என்ற நீதிமொழிகள் 18:10 வசனத்தை நினைவு கூர்ந்தேன். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு நகரத்தின் சுற்றுச்சுவர்களும் காவற் கோபுரங்களும் வெளியே இருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்பதாகவும், உள்ளிருக்கும் மக்களை பாதுகாப்பதாகவும் இருந்தன. தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய பரிபூரண தன்மைகளையும் குறிப்பதோடு, அவருடைய ஜனங்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிப்பதாக நீதிமொழிகள் எமுதியவர் தன் கருத்தை நீதி 18:10ல் தெரிவித்திறுக்கிறார்.

ஆபத்தான நேரம் என்று எண்ணி பாதுகாவலுக்காக வாஞ்சிக்கும் பொழுது சில இடங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. உதாரணமாக புயல் வீசும் பொழுது ஒரு பலமான கூரை நமது தலைக்கு மேல் இருப்பது, தேவையான பொழுது, மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனை இருப்பது, அன்புள்ளவர்களின் அன்புடன் கூடிய அரவணைப்பு ஆகியவைகளாகும்.

உங்ளது பாதுகாப்பான இடம் எது? எங்கு பாதுகாப்பைத் தேடினாலும், பெலனையும், பாதுகாவலையும் அளிக்கும் தேவபிரசன்னமே நமக்கு உண்மையான பாதுகாப்பான இடமாகும்.

அழகிற்கு முடிவே இல்லாத பொழுது

கிராண்ட் கேன்யன் என்ற உலகப் புகழ்பெற்ற மலைப் பள்ளத்தாக்கை பார்ப்பதை நான் அதிகம் விரும்புகிறேன். பள்ளத்தாக்கின் ஓரத்தில் நிற்கும் பொழுதெல்லாம், தேவனுடைய சிருஷ்டிப்பின் புதுமையைக் கண்டு ஆச்சரியத்தால் எனது மூச்சு நின்று போகும்.

கிராண்ட் கேன்யன் என்பது பூமியிலுள்ள மிக ஆழமான குழியாக இருந்தாலும், அது என்னை பரலோகத்தைக் குறித்து சிந்திக்க தூண்டுகிறது. 12 வயதுடைய ஒரு சிறுவன் “பரலோகம் சிலிப்பை உண்டாக்கும் இடமாக இருக்காதா? எந்த நேரமும் தேவனை துதித்துக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைந்துவிடமாட்டோமா?” என்று உண்மையான இருதயத்துடன் என்னிடம் கேட்டான். பூமியிலுள்ள ஒரு அழமான பள்ளம் நம் மனதைத் தொடக்கூடிய அளவிற்கு மிக அழகாக இருப்பதால், அதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க செய்யுமானால், அழகிற்கே ஊற்று காரணமுமான, ஆச்சரியமான புத்தம் பதிய சிருஷ்டிகளின் சிருஷ்டி கர்த்தாவாகிய நமது அன்பின் தேவனை நாம் காணும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும்.

தாவீது “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன். அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்று எழுதினபொழுது அவனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். நாம் விசுவாசத்துடன் தேடும்பொழுது இந்த உலகில் நம்மை நெருங்கி வரும் அவரது பிரசன்னத்தைப் போலவும், அவரை முகமுகமாகத் தரிசிப்பதை எதிர் நோக்கி இருப்பதைப் போலவும் அழகானவைகள் வேறு ஒன்றுமில்லை.

அந்த நாளில் அற்புதமான நமது கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பதில் நாம் களைத்துப் போகவே மாட்டோம். ஏனென்றால் அளவிடப்படமுடியாத அவரது உன்னைத் தன்மையையும், அவரது கரத்தின் கிரியைகளின் ஆச்சரியத்தையம் அறிந்து கொள்வதற்கு முடிவே கிடையாது. அவருடைய பிரசன்னத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய அன்பு அவருடைய அழகு ஆகியவைகள் ஆச்சரியப்படத்தக்க முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

நாம் வல்லமையைப் பெற்றுள்ளோம்

ஏதோ ஒரு பொருள் நொருங்குகிற பலமான சத்தத்தைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த சத்தம் எதிலிருந்து வருகிறது என்று அறிந்து வேகமாக சமையலறைக்கு ஓடினேன். காலியாக இருந்த காப்பி போடும் கருவியின் சுவிட்ச்சை தெரியாமல் போட்டு வந்திருக்கிறேன். வேகமாக ஓடிப்போய் அக்கருவியை மின் இணைப்பிலிருந்து நீக்கிவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து துக்கினேன். அப்பாத்திரத்தை கீழேயுள்ள டைல் கற்களின் மீது வைக்க இயலுமா என்று பார்க்க அதின் அடிப்பாகத்தை என் விரல் நுனியினால் தொட்டேன் அதன் சூடான அடிப் பக்கம் என் விரல்களின் நுனியை சுட்டு எனது மெல்லிய தோலில் கொப்பளங்கள் ஏற்பட்டது.

எனது கணவர் எனது காயங்களுக்கு மருந்து போட்ட பொழுது என் தலையை அசைத்தேன். “அந்தப் பாத்திரத்தின் அடிப்பக்கம் சூடாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், ஏன் அதைத் தொட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன்.

அந்த தவற்றை நான் செய்ததின் விளைவைவிட அதிகமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பாவத்தைக் குறித்து நமது எதிர்வினை என்ன என்பது பற்றி, பவுல் வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிட்டது எனக்கு ஞாபகம் வந்தது.

“நான் செய்கிறது எனக்கே சம்மதி இல்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுப்பதையே செய்கிறேன்” (ரோம. 7:15) என்று பவுல் தனது அவல நிலையை ஒப்புக் கொள்ளுகிறார். வேத வசனங்கள் எது சரி, எது தவறு என்று தெளிவாக தீர்மானிக்கிறது என்றும் (வச. 7) பாவத்திற்கு எதிராக மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையே இடைவிடாத போராட்டம் தொடர்ந்து நடக்கிறதென்றும், பவுல் திட்டமாக கூறுகிறார் (வச. 15-23) அவர் அவருடைய பெலவீனத்தை அறிக்கை இட்டு தேவனுடைய உதவியினால், இப்பொழுதும், எப்பொழுதும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார் (வச. 24-25).

நாம் நமது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது, அவர் அவருடைய பரிசுத்தாவியை நமக்கு அருளி, நன்மையான காரியங்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வல்லமையை நமக்குத் தருகிறார் (8:8-10). தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியத்தக்கதாக நம்மை பெலப்படுத்தி அவர் வழி நடத்துகிறார். இதனால் தேவனை நேசிப்பவர்களுக்கு அவர் அருளும் பரிபூரண வாழ்க்கையை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள நமது பாவங்களிலிருந்து, அவர் நம்மை மீட்டுவிடுகிறார்.

கல்லுகளுடன் ஒரு சந்திப்பு

பல நூற்றாண்டுகளாக யுத்தத்தையும் அழிவையும் சந்தித்த பழைய எருசலேம் நகரம், இன்று அதன் இடிபாடுகளுக்கு மேலாகவே தற்கால எருசலேம் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் ஒருமுறை எருசலேமிற்கு சென்றிருந்த பொழுது Via Dolora sa என்ற சிலுவைப் பாதையில் நடந்து சொன்றோம். அது இயேசு அவரது சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரிக்குத் சென்ற பாதையாகும். அன்று வெப்பம் மிக அதிகமாக இருந்தால், சற்று ஒய்வெடுக்க சீயோன் சகோதரிகளால் நடத்தப்பட்ட கத்தோலிக்க பெண் துறவிகல் மடத்தின் குளிர்ச்சியான அடித்தளத்திற்கு சென்றோம். அங்கு சமீப காலத்தில் கட்டடம் கட்ட தோண்டின பொழுது கிடைத்த நடை பாதைக் கற்களைப் பார்த்து வியப்பில் ஆழந்தேன். அந்தக் கற்களில் ரோமச் போர்ச்சேவகர்கள் ஓய்வாக இருந்த பொழுது விளையாடின விளையாட்டுக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அந்தக் குறிப்பிட்ட கற்கள் இயேசுவின் காலத்திற்கு பிந்தின காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்த பொழுதும், அவை அக்காலத்தில் இருந்த ஆவிக்கேற்ற வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது. வேலையில் களைப்படைந்த பொழுது, அவர்கள் நேரத்தை சோம்பலாகக் கழித்தது போல, தேவனைக் குறித்துப் பிறரைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்கின்றேனோ என்று எனது ஆவிக்கேற்ற வாழ்க்கையைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. நான் நின்று கொண்டிருந்த இடத்தில், கர்த்தராகிய இயேசு எனது பாவங்கள் மீறுதல்கள் அனைத்தையும் அவர்மேல் போட்டு எனக்காக வாரினால் அடிக்கப்பட்டார், ….., எச்சில் துப்பப்பட்டார் என்பதை அறிந்து என் மனம் ஆழமாகத் தொடப்பட்டது.

“நம்முடைய மீறுதலிகளினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” ஏசா. 53:5.

அந்த நடைபாதை கற்களோடு எனக்கு ஏற்பட்ட சந்திப்பு எனது பாவங்களைவிட மேலாக இயேசுவின் அன்பைப்பற்றி இன்னமும் என்னுடன் பேசுகின்றன.